Pages

Monday, July 16, 2018

ஓடிய பிரிஜ்....

நான் இரசித்த காணொளி ஒன்று உங்களின் பார்வைக்காகவும்... பிடித்து வைக்கவில்லை, அதுதான் ஓடிவிட்டது...


Sunday, July 15, 2018

மொட்டந்தலையும் அடுத்தவன் முழங்காலும்

மொட்டநதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்னடா என்றால் அடுத்தவன் முழங்காலுக்கே முடிச்சு போடுறான் நம்ம வெடியகத்தான். அவன் வீட்டு அடுப்பு எரியவில்லை என்றால் கூட விடுதலைபுலிகளை விட்டுவைக்காத அசகாய சூரன். ஆபிரிக்காவில் பஞ்சம் வந்தால் என்ன , அந்தாட்டிக்காவில் பனி உருகினால் என்ன, அமேரிக்காவில் புயலடிச்சால் என்ன ஐரோப்பாவிலிருந்து இயங்கும் தமிழ் தேசியம் போர்வைக்குள் இருக்கும் புலிதான் என்பதை மிக சதுரியமாக கண்டுபிடிக்கும் திறன் அவனுக்கு மட்டுந்தான் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையில இருக்கிற IOC இற்கு விக்கிற பெற்றோலில இலாபம் காணாதாம் என்று பெற்றோல், டீசல் விலையைக் கூட்டி ஏற்கனெவே விற்பனைச் சந்தையில பிடித்து வைத்திருந்திருந்த 20% இழக்கப் போறாங்கள் என்று பார்த்தால் CEYPETO உம் எரிபொருள் விலையைக் கூட்டி அவங்களை காப்பாத்திடுவானுகள் என்று அறிவிச்சு இருக்கானுகள். இரவோடு இரவாக அடுப்பு எறிக்கிற எரிவாயு விலையையும் ஏத்திட்டாங்கள், இனி கொஞ்சம் யோசிச்சுத்தான் பத்தவைக்கோணும் போல கிடக்குது அடுப்பை.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆண்டு வருமான வரியையை அதிகரிச்சுப் போட்டானுகள். இத்தனை நாள அடிப்படைச் சம்பளத்திற்கு இருந்த வருமான வரியை இனி மொத்த வருமானத்திற்கும் விதிக்கிறதாக தீர்மாச்சிருக்காங்கலாம். ஆனாலும் அதில இருந்து தப்பிக்க வழியாக வாகன செலவு, செலபேசி செலவு, பிரயாணச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்குமிடச் செலவு என்று “செலவு” கணக்கு காட்டி ஊழியருக்கு “சம்பளத்தை” குடுக்க சில நிறுவனங்கள் முடிவு செய்திருக்காம். அதுக்கும் ஆப்பு அடித்தமாதிரி இனி வாகன வரியும் மேலதிகமாக வரப்போகுதாம்.

நட்புடன்
கிஷோக்குமார்


அதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்.....

குட்டிக் கதை -:

ஒரு நாட்டை கொடுங்கோல் மன்னன் ஒருவன் ஆட்சி செய்துவந்தான். அவன் இறக்கும் தறுவாயில் அடுத்து ஆட்சி பொறுபேற்கும் தனது மகனை அழைத்து இந்த நாட்டு மக்கள் என்னை மெச்சும்படி செய் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான்.

தன் தந்தையோ செய்தது கொடுங்கோல் ஆட்சி, அதனை நாட்டு மக்கள் எவ்வாறு மெச்சுவார்கள்.பலமாக யோசித்த அரசன்.. அரசவை மந்திரிகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தானாம்.

தான் தந்தையையைவிட  கொடுமையான ஆட்சி செய்தால் மட்டுமே மக்கள் தனது தந்தையை மெச்சுவார்கள் என்பதே அந்த முடிவு.

ஜெயலலிதா அம்மையாரின் சர்வாதிகாரப்போக்கையே பரவாயில்லை என்று சொல்ல வைத்த பெருமை இந்த எடுபுடியியின் ஆட்சிக்கு வந்துவிடுட்டது.

நால்லாயிருங்கடா டயர் நக்கீஸ்...

நட்புடன்
கிஷோக்குமார்.
 

Sample text

Sample Text

Sample Text